Your Cart
Loading
Only -1 left

Thalirgalin Payanam

On Sale
$2.00
$2.00
Added to cart

வாழ்க்கை என்பது வெறும் நாட்களின் நகர்வு மட்டுமல்ல; அது நாம் சேகரிக்கும் அனுபவங்களின் அழகான தொகுப்பு. 'தளிர்களின் பயணம்' நூல் அத்தகைய பத்து உன்னதமான கதைகளைத் தாங்கி நிற்கிறது.


ஒவ்வொரு கதையும் ஒரு 'தளிர்' போல நம் மனதிற்குள் புதிய சிந்தனைகளை முளைக்கச் செய்யும். இதில் அறம், அன்பு, வீரம் மற்றும் இயற்கை என மனித வாழ்வின் ஆதாரமான பண்புகள் மிக அழகிய மொழியில் பேசப்படுகின்றன. புற உலகச் சிக்கல்கள் எப்படி சிறுவர்களை அக உலகச் சிக்கலுக்கு இட்டுச் செல்கிறது என்பதை எழுத்தாளர் அழகாக குறிப்பிடுகிறார். குழந்தைகளின் தூய்மையான உலகம் முதல், பெரியவர்களின் வாழ்வியல் அனுபவங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு வரை எனப் பல தளங்களில் இக்கதைகள் பயணிக்கின்றன.


சமூகத்தின் மீதான அக்கறையும், தனிமனித ஒழுக்கமுமே ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் என்ற கருத்தை மையமாகக்கொண்டு, சமகாலச் சிக்கல்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் ஆசிரியர் கார்த்திக்.வெ கதைகளின் வாயிலாக முன்வைக்கிறார். இந்தப் புத்தகத்தை வாசிப்பது என்பது ஒரு பசுமையான வனத்திற்குள் பயணிப்பதைப் போன்ற ஓர் இனிய உணர்வைத் தரும்.


You will get a PDF (1MB) file